கனடா விபுலானந்தர் கலை மன்றம் நடத்திய வருடாந்த பரிசளிப்பு விழா………

கனடா வாழ் தமிழ்ச் சிறார்கள் மற்றும் இளங்கலைஞர்கள் ஆகியோர் மத்தியில் மறைந்த விபுலானந்த அடிகள் பற்றியும் அவர்தம் பணிகள் பற்றியும் தேடலையும் அறிவையும் தோற்றுவிக்கும் முகமாக கனடா விபுலானந்தர் கலை மன்றம் நடத்திய பல்வேறு போட்டிகளில் பங்குபற்றியவர்கள் மற்றும் பரிசுகளைத் தட்டிக் கொண்டவர்கள் ஆகியோருக்கு பரிசளிக்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்;காபுறோவில் 3600 கிங்ஸ்டன் வீதியில் அமைந்துள்ள ஸ்காபுறோ விலேஜ் ரெக்கிரியேசன் சென்றர் மண்டபத்தில் நடைபெற்றது.

கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கருத்தாளமிக்க உரைகளை கலாபூசணம் சி;வானந்த சர்மா (கேர்பபாய் சிவம்) மற்றும் டாக்டர் மேரி கியுரி போல் ஆகியோரும் ஆற்றினர். இந்த விழாவி;ற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை கனடாவில் இங்கிவரும் விபுலானந்தர் கலை மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் இணைந்து நடத்தினர். வர்த்தகப் பிரமுகர் திரு கமனலநாதன் பாக்கியராஜா உட்பட பலர் நிதி உதவிகளை வழங்கியிருந்தனர்.