~~~கலங்காதே கன்னி ~~~

பச்சைக் கிளியும் உந்தன் கன்னங்களை,
பஞ்சு மெத்தை என்று எண்ணிவிட்டதோ?
இச்சை கொண்டு அது உன் இதழ்களை
இனிய கொவ்வையென கௌவியதோ?
முச்சை கட்டிப்பறக்கும் உன் ஆசைகளை,
முடித்து வைக்கத்தான்,தூது போகிறதோ?
மூச்சேஅவனாகி விட்ட உன் காதலனின்
முகவரியை உன்னிடம் சொல்கிறதோ?
கச்சையிட்டுக் காத்திருக்குமந்த காதலன்
கன்னியுன்னை தேடிவருவான் கலங்காதே.
கிளிநேசன்