***கலங்கி ஓடாதே மனிதா**கவிதை வாழ்வுநேசன்

 

மழலை நினைவுகள் எல்லாம் மனதில் நிலைப்பதில்லை-
நிலைத்ததென்னவோ குறும்பாய் ஓடியாடிய நினைவுகளே-
நினைவுகளில் அசைபோடச் சிறந்தது இளமைப் பருவம்-
இளமைப் பருவத்தில் மிகஇனிமையானது காதல் வசம்-
காதல் வசப்படாவிடின் அது பூரணமற்ற வாழ்க்கையாம்-
வாழ்க்கை வளம் பெற வரப்பிரசாதமாவது திருமணமே-
திருமணத்தின் சிறப்பு, தம் வாழ்வில்வரும் திருப்பங்கள்-
திருப்பங்களை தீர்மானிப்பது தம்பதியரின் தாம்பத்தியம்-
தாம்பத்தியத்தில் பிறப்பதுதான் மனநிறைவான குடும்பம்-
குடும்பவாழ்வில் மறுக்க முடியாதது, வரும் குழப்பங்கள்-
குழப்பங்களை சீர்செய்வதே சிறந்த வாழ்வின் பெருஇன்பம்
இன்பம் மட்டுமே வாழ்கையானால் இலகுவில் கசந்திடும்
கசந்திடாத வாழ்க்கைக்கு கடவுளின் பரிசே இன்னல்கள்.
இன்னல்களைக் கண்டு கலங்கி ஓடாதே மனிதா !!!
ஆக்கம்  வாழ்வுநேசன்