கலியாணக் கரகம்” – (காணொளிப்பாடல்)பற்றி மது சுதா

கலியாணக் கரகம்” – (காணொளிப்பாடல்)2014 இல் ஒரு பாடல் இயக்கினேன். அதன் பின் படங்களுடன் காலம் போய் விட்டது. எனக்கு படம் மட்டும் தான் இயக்கத் தெரியும் என நினைத்தார்களோ தெரியவில்லை யாருமே என்னிடம் இதற்காக வருவதில்லை நான் கேட்கப் போகின்றவரும் தலை தெறிக்க ஓடிவிடுவார்கள்.இந்தப் பாடல் இயக்கத்துக்காக என்னிடம் வந்ததே எனக்கு மிகச் சவாலான விடயமாகிப் போனது காரணம் மதன் அண்ணாவும் , ஹரியும், ஜொனாவும் மற்றும் அவர்கள் சூழ் நண்பர்களும் என் மேல் கொண்ட அளவுக்கதிகமான நம்பிக்கை தான். அது பற்றி பின்னர் பேசிக் கொள்வோம்.இக்காலம் வெளியீட்டுக்கு உகந்ததில்லை என மதன் அண்ணா தலமையிலான எம் குழுவின் முடிவுக்கமைய 17 ம் திகதிக்குப் பின்னர் ஒரு நாளில் வெளியிடுகின்றோம் அதற்கு முன் சுவர்ப்படத்தை உங்கள் முன் பார்வைக்கு வைக்கின்றோம்.இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். சுவர்ப்படத்தை வடிவமைத்த கதிருக்கும் மிக்க நன்றிகள்.