கவிஞர் மன்னனூர் மதுராவின் கவிதை நூலின் வெளியீட்டு விழா

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய கவிஞர் மன்னனூர் மதுராவின் அக்கினிக்குஞ்சுகள் கவிதை நூலின் வெளியீட்டு விழா இன்று காலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வேளை மகுடம் பதிப்பக இயக்குனரும், மகுடம் கலை இலக்கிய வட்ட தலைவருமானவி.மைக்கல் கொலின் வரவேற்புரை ஆற்றுவதையும், பேராசிரியர் செ.யோகராசா தலைமையுரை ஆற்றுவதையும், பிரதம அதிதியாக கலந்து கொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் கவிதை நூலை வெளியிட ஓய்வு நிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.க.டேவிட் முதல் பிரதியை பெற்றுக் கொள்வதையும் கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவன சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. க.மோகனதாசன் நூல் நயவுரை ஆற்றுவதையும், கற்குடாவலய உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.ச.தட்சணாமூர்த்தி சிறப்புரை ஆற்றுவதையும், பிரதம அதிதி உரையை திரு. வ. வாசுதேவனும் நூலாசிரியர் பற்றிய அறிமுகத்தை அதிபரும், எழுத்தாளருமான திரு.ச.மணிசேகரன் வழங்குவதையும், நன்றியுரையை நூலாசிரியர் கவிஞர் மன்னனூர் மதுரா ஆற்றுவதையும் காணலாம்.