கவிதையாக…

என்னில்
நிறைந்தவளே
என்னை
புடம் போடும்
வித்தகி நீ.
நான்
படித்து
முடிக்காத
புத்தகமும்
வித்தகமும் நீ.
உன்னை
எழுத எண்ணும்
பொழுதுகளில்
கோபம் கொள்ளும்
காரிகை நீ..
தூரிகை
கொண்டு
ஓவியத்தில்
வரைந்திட
வரையறை
போடுவது நீ…
பொதுவாக
எழுது என
சாதுவாகவே
சொல்லும்
சாது நீ….
உயரத்தில்
உனக்கான
தளத்திலே
மாற்றங்கள்
ஏதுமின்றி
ஏற்றத்தில் நீ…
மனப்பதிவில்
ஆவணமாகும்
வரிகளில்
வாழும் உயர்
நிலை நீடு
வாழியவே நீ.

 

ரி தயாநிதி