காதல்..!!கவிதை கவிஞர் தயாநிதி

 

காதலினால்
பாசமும்
பாசத்தினால்
காதலும்
வியாபகம்
காண்பது
வினோதம்
ஏதுமில்லை;

இரக்கத்தால்
காதலும்
விரகதாபத்தால்
காதலும்
நிலைப்பதற்கில்லை;
பிரியத்தால்
காதலும்
காதலால்
பிரியமும்
வாழ்வியலில்
கண்கூடு.;!

உருவமில்லாத
காதலுக்கு
உயிர் கொடுத்து
உயிர்ப்பதென்பது
தேனீக்களின்
கூடு போன்றது;
நம்பிக்கை
ஒன்று தான்
நலன் காக்கின்றது;
விடா முயற்சி
மட்டுமே மூலதனம்;.;!

கவியரசும்
வாலியும்
வைரமுத்துவும்
கவி எழுத வேண்டாம்;
வாலிபனாயும்
வேண்டாம்
வசதியும் வேண்டாம்;
வாய்ப்பினை
உருவாக்கு
உண்மையாய் உழை;!

பிரியனாகு
பித்தனாகு
கோதை வசமாகக்
கவிதையாய்
கொட்டும்..!
தூரம் அதிகமானாலும்
நேரம் வரும் போது
ஈரம் சுரக்கும்
காதல் கனியும்
அதுவரை உன்
காத்திருப்பும்
பெரும் சுகமே.;!

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken

Merken