காதல் மழை..!கவிதை கவிஞர் தயாநிதி

மாலையில்
மழை…
மனதினில்
மயக்கம்..

பருவ
காலத்து
மழையா
பருவம்
தப்பிய
மழையா
அறியிலன்..

ஆனாலும்
ஆனந்த
மழை கண்டு
தயக்கம்
கலைந்தது
கவிதை
மலர்ந்தது.

இடைவெளி
இல்லாத
துருவ மழை
இருவர்
மனதுக்கும்
இன்ப மழை.

இது தான்
இதயம் குளிரும்
இன்ப மழையோ..
இதம் சேர்க்கும்
இடரில்லா
சுவை மழை.
எதுவோ
ஒரு மழை.
சேர்ந்தே
நனைவோம்
வா…

பருவம்
தாண்டினாலும்
உருவம்
மாறாத
காதல் மழை.
உயரம்
தொட்டாலும்
அகரம்
மாறாத மழை.
ஒரு குடை
இரு நடை

ஆக்கம் கவிஞர்தயாநிதி