காதல்::!

உண்மை
இருக்கின்றது;
உணர்வு
இருக்கின்றது
உழைத்த கவலை
தெரிகின்றது;;;!

ஆனாலும்
இனம் புரியாத
இழப்பும்
இல்லாமையும்
தெரிகின்றது;;;!

எஞ்சியது
இவர்கள்
காதல் மட்டுமே;!
திக்கெட்டும்
இவர்கள் பிள்ளைகள்;

கைப்பிடியில்
நீள்கின்றது
அழியாத பந்தம்;
வழித் துணைக்கு
கூடவே கைத்தடிகள்.
இருபதில்
எழுவதல்ல,காதல்
அறுபதிலும்
தொடர்வதே
ஆனந்தக் காதல்
இவர்களை வணங்குவோம்;
வாழவும் பழகுவோம்;

கலைஞர் தயாநிதி