காதல்.

ஊடலும்
தேடலும்
காதலில்
மட்டுமே

பிரிவதும்
சேர்வதும்
காதலில்
மட்டுமே

எதிர்பார்ப்பும்
ஏமாற்றமும்
நிறைவாய்
காதலில்
மட்டுமே

வலியும்
வேதனையும்
காதலில்
ஆழமே

உண்மை
பொய்தெரியாது
உழல்வதும்
காதலிலதிகமே

ஒரு மனமேங்கும்
மறுமனம்பிரியும்
இதுவும் காதலில்
சகயமே

இரண்டறக்கலந்த
காதல்கூட
காரணமின்றி
பிரிவது காதலில்
நிகழ்வதே

ஒரு இதயம்
அழவைத்து
மறு இதயம்
சிரிக்க பேசுவதும்
காதலில் மட்டுமே

காதல் காதல்
இறுதியில் என்ன
கண்ணீரும்
காயங்களும் தான்
மீதியே..,.**

 ஜெசுதா யோ