காயங்கள்..கவிதை கவிஞர் ரதிமோகன்

வாடிய மலர்கள் மீண்டும்
மலர்வதில்லை
அன்பிற்குள் விழுந்த
விரிசல்கள் சேர்வதில்லை..

பிரிந்ததும் புரிந்ததும்
புதிரான உறவுக்குள்
புதிதாக மலரும் நேசங்கள்
பழையதுபோல் இருப்பதில்லை..

பாவப்பட்ட உள்ளங்கள்
அன்பைச்சுமந்த குற்றத்திற்காய்
ஆயுள்வரை பெறும் தண்டனைதான்
ஆறாத காயங்களென்று
அப்பட்டமாய் சொல்ல முடிவதில்லை..

காயங்களை சுமந்திடும்
இந்தக்காயமே பொய்யென்ற
பட்டினத்தான் வாக்கினிலும்
தப்பு எதுவும் இல்லை…

ஆக்கம் ரதிமோகன்