***கால்க்கட்டு ***


மங்கையவள் மனதுக்குத் தான்
மாராப்புகள் எத்தனை எத்தனை .
மனம் கொண்ட மணாளனின்
மடிசேரவோ , அத்தனை போராட்டங்கள் .
*
கன்னியவள் கால்கள் எங்கெங்கெல்லாம்
கட்டுண்டு கிடக்கிறதோ அங்கங்கெல்லாம்
களங்கங்கள் கட்டவிழ்ந்து விட்டுவிட
காத்திருப்புகள் காத்திருக்கும் கவனம் .
*
பெண்ணவள் ஒன்றும் உன் வீட்டுப்
பிராணி அல்லவே, அவளைப்
பேசா மடந்தையாக்கி உந்தன்
பின்னால் ஒழித்து வைத்துவிட .
*
பேதை நேசன்