காவல்க்காரன்!கவிதை கவிஞர் தயாநிதி

 

பூக்களை
நேசிப்பவன்
பூவையரை
யாசிப்பான்.
பூவையரை
போற்றுபவன்
பைந்தமிழை
நேசிப்பான்.

இப்புவியில்
தமிழ் உணர்வோடு
வாழ்வோரில்
பிரியம் கொள்வான்,
செந்தமிழுக்கு
சொந்தக்காரன்
முத்தமிழில்
முத்தெடுப்பான்.

இயல் இசை
நாடகத்தில்
நாட்டம் கொள்வான்,
நாவன்மைக்கும்
நற்திறனுக்கும்
மதிப்பளிப்பான்,
நம் கலை வளர
உயிர் கொடுப்பான்,

நோக்களை
மறக்காது
பாக்களில் தன்
வலி பகிர்வான்.
வெறும் வார்த்தைகளில்
வாழாது தமிழ்
வாழ்வுக்காய்
ஈகம் செய்வான்.

தன் வீடு
தன் தோட்டம்
தன் தேட்டம்
தாண்டியும் தமிழ்
மண்ணுக்கே
காவலாவான்..
அவனே மறத்
தமிழனாவான்..

ஆக்கம் கவிஞர்தயாநிதி