குயிலொன்று….!கவிதை கவிஞர் ரதிமோகன்

அடர்ந்த காட்டின் மரங்களில்
மோதி தெறித்து ஒலிக்கிறது
அந்தக்குயிலின் குரல்..

பனியில் குளித்த சிறகுகள்
பறத்தலுக்குத் தடைசொல்ல
பற்றியகால்கள் கிளையைவிட்டு
மெல்ல நழுவுகிறது..

பனிக்கும் புயலுக்கும்
ஈடுகொடுக்க முடியாத
மரக்கிளையும் முறிந்து
விழுகின்ற தறுவாயில்..

வலியிலும் வேதனையிலும்
பாடுவதை நிறுத்தவில்லை
இல்லை அழுகிறது
புரியாதவர்களுக்கு அது
ஒரு குயில்பாட்டு
புரிந்தவர்க்கு…???

ஆக்கம் ரதிமோகன்