குறிப்பேடு…

மனதில்
நிறைந்தவை
மனதை விட்டு
மறைந்தவை.
துளிர் விட்டமை
பட்டவை..
எழுதியவை
எழுத மறந்தவை….
சொன்னவை
சொல்லாமல்
போனவை
சொல்லியும்
பண் படாப்
பாடங்கள்
எதிர்பாராத
ஏமாற்றங்களின்
அறுவடை…
புரட்டாத
பக்கங்களில்
புதையல்கள்
புதுமை பட..
பதிந்தவை..
மௌனத்தின்
புரியாத பாஷைகள்.
தினக்
குறிப்பினைத்
திருப்பியதில்
சுகமான சோகங்கள்..
கனமான கருத்துக்கள்..
புரட்டிய
பக்கங்களில்
இவை இலக்கியமா
இல்லை இலட்சியங்களா
இலக்கினை எட்டாத
பயணங்களா…
சாட்சியங்களா..
நட்பின்
முற்றுகை தாராளம்
வலிந்ததும்
நலிந்ததும்
முறிந்ததும்
முளைத்ததும்….
சிரிப்பின்
நடுவே சின்ன
நெருடல், கிடைக்காத
வருடல்..தெரியாத
திசைகள்,,
நகர்வும் தேடலும்
குன்றவில்லை
நம்பிக்கை நலன்
கெடவுமில்லை..
பக்கங்கள் தொடரும்..

 

கவிஞர் ரி.தயாநிதி