குறுமழை இரவு

குறுமழை இரவு


மின்னி வரும் ஒலியோடு
அறை நிரம்பி வழியும் குளிர்
உடலோடும் உணர்வோடும்
ஒட்டிக்கொள்கிறது கூதல்
பழரசக் கோப்பைக்குள்
எறும்பென – ஏதோவோர்
தெளியாத மயக்கத்தில் மேனி
ஆத்மார்த்தமாய்த் தேகம் தீண்டி
சில்லென்று சிலிர்க்கிறது
மழைக்காற்று
இன்பத்தை இறைத்துத் தீர்க்கும்
மழையின் துளிகளிலெல்லாம்
அன்பின் சாயல்கள்
சாளரத்தை முத்தமிடும்
தூறல்களில் கசிவதெல்லாம்
நேசத்தின் ஈரங்கள்
ஆம்,
நிஜங்களை மட்டுமல்ல
நினைவுகளையும் துளிர்விக்கிறது
இந்தக் குறுமழை இராப்பொழுது!

  • வேலணையூர் ரஜிந்தன்.
    18.09.2021