கெளரவிப்பு.

என்னை
நேசிப்போர்
நானும் நீங்களும்
வளர்ந்த
மண்ணையும்
நேசியுங்கள்.
உங்கள்
தேவைகள்
அனைத்திலும்
நான் மருந்தாக
விருந்தாக
வீட்டுக்கு
வளையாக
கட்டிலாக
தொட்டிலாக
துலாவாக
உங்களில் ஒன்றாகி
வாழ்கின்றேன்.
உறுதியாக
உற்ற துணையாக
நேராக
நேர்த்தியாக
மண்ணில்
வளர்ந்து
ஆற்றும் பணிக்கு
தேசிய மரம்
எனும் அதி
உயர் கெளரவிப்பு.
காதலர்களே
என்னை
உங்கள் காதல்
சின்னங்களாக
தேசத்தின்
குறியீடாக்கி
விடியலில் குறியாக
நகருங்கள்.
எத்தனை
எறி கணை
எத்தனை
ஏவுகணை
பொஸ்பரஸ்
குண்டுகள்
எரி வாயுக்கள்
அத்தனையும்
தாங்கி தாண்டி
தளராமல்
தளைக்கின்றேன்.
விதையான
மறவர்களை
மனதிலிருத்தி
வீட்டுக்கொரு
பனை விதை
ஊன்றுங்கள்.
என்னையும்
காதலியுங்கள்.
நான் மண்ணையும்
உங்களையும்
காத்திடுவேன்.