கைதடியில் அற்புதக் குமரன் நூல் வெளியீடு

கைதடி வடக்கு அருள்மிகு கயிற்றசிட்டி கந்தசுவாமி கோவிலின் வரலாற்றை உள்ளடக்கிய அற்புதக் குமரன் என்ற நூலின் வெளியீட்டு விழா ஆலய பரிபாலனசபை உறுப்பினரும் யாழ். பல்கலைக்கழக மாணவருமாகிய சி.மதீசன் தலைமையில் நடைபெற்றது.
.
நிகழ்வில் வரவேற்புரையை ஆலய உபதலைவர் செ.தவகுமாரனும் ஆசியுரைகளை ஆலய பிரதம குரு வண. மு.கணேசக்குருக்கள், வண. மு. ஐயாத்துரைக்குருக்கள் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆகியோர் நிகழ்த்தினர்.
.
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் வாழ்த்துரையையும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் நூலின் வெளியீட்டுரையையும் ஆற்றினர்.
.

நூலின் முதற்பிரதியை செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனிடம் இருந்து ஆலய பரிபாலன சபைப் பொருளாளர் செ.இராசையா பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதிகளை ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் நல்லை ஆதீன முதல்வரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். நூலாசிரியர் சி.மதீசன், நல்லை ஆதீன முதல்வரால் கௌரவிக்கப்பட்டார்.

Merken