சத்திய சோதனை

கல்வியில் கலையில்
சிறந்தென்னபயன்
காலம் எமக்கு வகுத்த
விதிவழி என்னவோ
சுழல் காற்றில் அகப்பட்ட
இலையென
எம் இனத்துக்கு வந்த
சத்திய சோதனைகள்..

காட்டிக் கொடுப்போரும்
போலிமுகங்களும்
முகமூடியணிந்து
நம் ஆசைகளுக்கு
தீயிட்டனர்..

வழிப்பயம் இன்றி
பெண்துணையின்றி
இரவும் பகலும்
துணிவோடு போன காலத்திற்கு
வந்ததே சத்திய சோதனை.

வாள்வெட்டும் குழுக்களுமாய்
குடிபோதையில் இளைஞர் கூட்டம்
கைகளில் ஒன்றுக்கு இரண்டு
அலைபேசிகள்
கல்வியின்றி கரைந்தே போனது…எம்
தமிழுக்கு வந்த சத்திய சோதனையா..?

குளிரிலும் பனியிலும்
மணிக்கணக்கில் கால்கடுக்கநின்று
அனுப்பிய பணம் அரைநொடியில்
கரைந்தே போகிறது…

சொந்தமென்ன பந்தமென்ன
வாழ்க்கை வெறும் பணத்துக்காகவே
வலிகளைசுமந்த நெஞ்சங்களுக்கு
உறவுகளிடத்தில் இருந்து வந்த சத்திய சோதனை இது.

ஜெசுதா யோ