சந்தோசமேகம்…கவிதை கவிஞர் ரதிமோகன்

பூபாளம் கும்மாளம்
பொழுதெல்லாம் என்னோடு
நீயிருந்தால் புன்னகைக்கும்
உதடுகளும் பொன் சொரியும்.,

பொற்கோலம் புதுமேகம்
பூத்தூவி வாழ்த்துரைக்கும்
பூவைக்குள் உன் வாசம்
புத்துணர்வு கவி படிக்கும்..,

உல்லாசம் உற்சாகம்
உன் கண்ணில் மின்சாரம்
நீதானே என் உலகம்
என் நிழலும் உனைத்தொடும்…

ஆக்கம் ரதிமோகன்