சாதனையாளன்.

நாம் பார்க்க
வளர்ந்தவன்.
நடனக் கலைஞனாய்
அவதாரம் .
அவதாரம் குழுவிலும்
நாயகன்…

தரமான கவிஞனாய்
உயர்ந்தவன்.
குறுகிய காலத்தில்
குறும்பட நடிகன்.

நாட்கள் நகர
இயக்குனன்.
ஈழத் திரைக்கு
இவன் ஒரு முத்திரை.

இவனது படைப்புக்கள்
அழியாத காவியங்கள்.
உலகத் தரத்தில்
இவனது சிந்தனைகள்..

மாவீரருக்காக
வணங்குகின்றோம்
மாவீரரே எனும் இவன்
வரிகள் அழியா வரம்..

இவர்களை பாரா
முகமாக இருப்பவர்கள்
முன் வருவார்களானால்
சாதனைப் பட்டியலில்
சதாப்பிரணவனாவான்.
வாழ்த்துவோம் வாரீர்.

                                           ஆக்கம் கவிஞர்தயாநிதி