சித்திரை தாண்டி வைகாசி!கவிதை ஜெசுதா யோ

சித்திரை தாண்டி
வைகாசி வருகிறது
குளிர் அகன்று
மென் வெயில் எறிக்கிறது

பட்டமரங்களெல்லாம்
பசுமையாக காட்சி தருகிறது
மழையும் மெல்ல தூறுகிறது
வாடைக் காற்றும் வீசுகிறது
பூச்செடிகளெல்லாம்
மொட்டவிழ்த்து மலர்ந்து
மணம்பரப்புகிறது..

இதயம் எங்கும் இன்பமயம்
பறவைகளும் கூடு திரும்பின
வெற்ருடலோடு
புட்தரையெங்கும் மனிதர்கள்
ஆடைகள் எல்லாம்
அரைகுறையானது
இத்தனையும் கண்டு போகிறது
வசந்தகாலமும் இங்கே

ஆக்கம் ஜெசுதா யோ