சிறந்த செய்தி வாசிப்பாளர் விருது பெற்ற கல்முனை சேர்ந்த தமிழ்பெண்!

on: March 29, 2019PrintEmail

சிறந்த செய்தி வாசிப்பாளர் விருது பெற்ற கல்முனை சேர்ந்த தமிழ்பெண்!

தொலைக்காட்சி விருதுகளில் தனித்துவமான இடம் பெற்றுள்ள றைகம் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான கல்முனையை சொந்த இடமாகக்கொண்ட சாம்பவி குமாரலிங்கம் அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் செய்தி வாசிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் பழைய மாணவியான சாம்பவி குமாரலிங்கம் முதலாவது பட்டப்படிப்பை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு ஊடகக்கற்கைகள் சிறப்புக்கலை பட்டத்தை முடித்து ஊடகத்துறைக்குள் நுழைந்தவர்.

தனியார் ஊடகத்தில் சில காலம் பணியாற்றிவிட்டு பின்னர் தேசிய தொலைக்காட்சியில் இணைந்து கொண்டார். தற்போது அங்கு பகுதிநேர ஊழியராக இருக்கும் அதேவேளையில் இரண்டாவது பட்டப்படிப்பாக சட்டம் பயின்றுகொண்டிருக்கிறார்.

ஊடகத்துறை சார்ந்தும் சட்டத்துறை சார்ந்தும் தனது தந்தையைப் போல் சர்வதேச அளவில் பணியாற்ற வேண்டும் என்கின்ற இலக்கோடு பயணிப்பதாக சாம்பவி குமாரலிங்கம் தெரிவித்துள்ளார்.