சிறையென்ன சிறை

சிறை

சிறையென்ன சிறை

கருவறையும் சிறை தான்
கல்லறையும் சிறை தான்
வரையறையும் சிறை தான்
மனக்குறையும் சிறை தான்.

அலைக்கு கரை சிறை தான்
கலைக்குத் திரை சிறை தான்
சிற்பிக்குள் முத்து சிறை தான்
கற்புக்குள் மனிதம் சிறை தான்.

இலட்சியங்கள் உணர்வுகளுக்குள்
தீ மூட்டிச் சிறை தான்.
இதயங்களில் இடம் மாறி
காதல் கூடச் சிறை தான்.

சூரியனைக் கருமுகில் போர்த்தால்
சூரியனுக்கு அது சிறை தான்.
காற்றை ஊதிப் பையில் அடைத்தால்
காற்றுக்குமது சிறை தான்.

சிறை ஒன்றும் குறையில்லை
சிறையின்றி வாழ்வில்லை….

கலைப்பரிதி.