******சீக்கிரம் வா என்னுயிரே******


ஏக்கத்தில் நானும் அங்கே
எலவமர நிழலின் மடியினில்
என்னவனே உன்னை நினைத்தபடி ,
ஏகாந்த உறக்கத்தில் ஆழ்ந்திருக்க .
*,
தூக்கத்தின் பாதியில் நீயோ
துயில் எழுப்பி, என்னை
துக்கத்தை தந்து மறையும்
துஷ்யந்தன் ஆவதேனோ ?
*
நோக்கம் கொண்டு நிதமுமென்னை
நோகடித்து மகிழ்ந்து நகைப்பவனே!!
நொடிப் பொழுதேனும் உன்னை
நினைக்காமல் இருக்கும் அருள் தருவாயா?
*
பார்க்கத்துடிக்கும் என் விழிகளுக்கு
பதில் கூறிடு முதலில் நீயும் ,உன்மேல்
.படரத்துடிக்கும் என் இளமையை
பார்த்து ரசிப்பதும் பாவம் இல்லையோ .
*
சாக்குசபோக்குச் சொல்லி என்னிடம் நீயும்
சரணடையலாம் என்று மட்டும் எண்ணாதே!!
சண்டையில் நீ வெற்றியீட்டிய மறுகணமே
சங்கதி கூறிட என்னிடம் ஓடிவா உயிரே !!
வீரநேசன்