சுமையல்ல.!கவிதை கவிஞர் தயாநிதி

கல் தோன்றி
மண் தோன்ற
முன் தோன்றிய
மூத்த மொழி…

பல நூறு
ஆண்டுகள்
கடந்த மொழி.
என் மொழி
சுமையல்ல சுகமே…

வாசிப்பு. நேசிப்பு
பிரசவிப்பு..
வனம் ஒன்று
நந்தவனமானது
தமிழ் பூக்கின்றது..

எந்தையர்
மொழியின்
விந்தையது.
விஞ்சிட ஏது
மொழியுண்டு.

நெடு நேரச்
சிந்திப்பு
சில நேரச்
சிதறல் சிந்தைக்கு
பெரு விருந்து
என் ஓய்வுக்கு
அரு மருந்து.
பிடித்தவர் அருந்துங்கள்.
தமிழ் சுமையல்ல
பெரும் சுகமே…

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken