சென்னைப் புத்தகத் திருவிழா -2019 இல் “இரத்தினம் கவிமகன் எழுதிய பகிரப்படாத பக்கங்கள் “

இரத்தினம் கவிமகன் எழுதப்பட்டு கடந்த கார்த்திகை மாதம் 18 ஆம் நாள் வெளியீடு செய்யப்பட்ட மாவீரர்கள் நினைவுகளைச் சுமந்த புத்தகமான பகிரப்படாத பக்கங்கள் தமிழ்நாட்டின் சென்னையில் 2019 தை 4 ஆம் நாள் தொடங்கியுள்ள 42ஆவது புத்தக காட்சியில் போதி வனம் பதிப்பகத்தின் காட்சியறையில் பெற்றுக் கொள்ளலாம். போதிவனம் பதிப்பகம் 146 ஆம் இலக்க காட்சியறையில் தனது புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளது மட்டுமல்லாது பல நூறு எழுத்தாளர்களின் புத்தகங்களை காட்சிப்படுத்துகிறது. அன்பு நண்பர்களே உங்களின் ஆதரவு எனக்குத் தேவை அங்கே புத்தகத்தை பெற்றுக் கொள்ளுங்கள். எம் தாயகத்துக்காகவும் எம் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்முயிர் தந்த மாவீரர்களின் நினைவுகளை அறிந்து கொள்ளுங்கள்.
உங்களின் வருகையை எதிர்பார்த்தபடி இரத்தினம் கவிமகன் போதிவனம் காட்சியறையும்…
வாருங்கள் அன்பானவர்களே …