ஜெர்மனி ஹாம் காமாட்சி பாமாலை02 .06 .2018 அன்று வெளியீடு

எதிர் வரும் 2 .6 .2018 அன்று காமாட்சி அன்னையவள் அருளோடும் ஆலய குரு சிவ ஸ்ரீ பாஸ்கர குருக்கள் ஸ்ரீமதி மதிவாணி அம்மா பாஸ்கர குருக்கள் ஆசியோடும் .என் மதிப்புக்குரிய ஆசான் சிவானந்த சர்மா (கோப்பாய் சிவம் ) அவர்களின் ஆசியோடும் ஊக்குவிப்போடும் .ஏனைய பல நாடுகளில் இருந்து ஆசிகளை வழங்கிய இந்து குருமார்களின் அன்போடும் .இலங்கை ஒளிபரப்பு கூட்டுஸ்தாபன இசைஅமைப்பாளரும் தயாரிப்பாளரும் எனது மதிப்புக்குரிய நண்பருமான திரு .சிவசங்கர் அவர்களின் வழிகாட்டலிலும் அவரது இசைஅமைப்பிலும் ஷ‌ிறாணி உதயகுமார் நானும் எனது இசை உலக அன்பு நண்பர்களும் வளர்ந்து வரும் இசை உலக சிறுகுழந்தைகளும் சேர்ந்து காமாட்சி அம்மனுக்கு இசை பாமாலை பாடி இறுவட்டு ஒன்றை வெளியிடுகின்றேன் .இந்த நிகழ்வில் அன்பளிப்பாக வரும்பணத்தை ஈழத்தில் தாய் தந்தை அற்ற குழந்தைகளுக்கு வழங்கவுள்ளேன் .இந்த நிகழ்ச்சிக்கு நண்பர்கள் உறவினர்கள் யாபேரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு மிகதாழ்மையாக வேண்டி கொள்கிறேன் . இந்த விழாவை தலைமை ஏற்று இலங்கையில் இருந்து வருகை தரும் எனது நண்பர் திரு.சிவசங்கர் அவர்கள் நடத்தவுள்ளார் என்பதை மிக மகிழ்ச்சி உடன் அறிய தருகிறேன்.
தகவல் -மீனா உதயா