சொப்பனத்தில்
உன் உருவம் -வந்து
சுற்றிச் சுற்றி -என்னை
உருத்துதே…
அக்கணத்தில்
என் பருவம் -மெல்ல
தீப்பற்றியது போல்
எரியுதே ….
மலர் வதனம் நேரில் காண
மனம் பல தினமாய் ஏங்குதே…
பகல் முழுக்க –
உன் நினப்பால் தூங்குதே…
உலர்ந்து விட்ட இலையைப் போல்
இதயம் உருமாறுதே….
கறந்து வைத்த பால் நுரைப்போல்
செங்குருதி நிறம் மாறுதே…
என்னில்
மாற்றம் தந்தவளே…
உன்னில்
ஏமாற்றம் ஆகிவிடின்
மண்ணை மனையாய்
மாற்ற எண்ணம்
எனக்கு தோன்றுதே ….