ஞாபகங்கள்

சொப்பனத்தில்
உன் உருவம் -வந்து
சுற்றிச் சுற்றி -என்னை
உருத்துதே…

அக்கணத்தில்
என் பருவம் -மெல்ல
தீப்பற்றியது போல்
எரியுதே ….

மலர் வதனம் நேரில் காண
மனம் பல தினமாய் ஏங்குதே…
பகல் முழுக்க –
உன் நினப்பால் தூங்குதே…

உலர்ந்து விட்ட இலையைப் போல்
இதயம் உருமாறுதே….
கறந்து வைத்த பால் நுரைப்போல்
செங்குருதி நிறம் மாறுதே…

என்னில்
மாற்றம் தந்தவளே…
உன்னில்
ஏமாற்றம் ஆகிவிடின்
மண்ணை மனையாய்
மாற்ற எண்ணம்
எனக்கு தோன்றுதே ….

கவித்தென்றல் ஏரூர்