டெனிஷ் மக்களையும் தன் ஆளுமையால் ஆகர்ஷித்துக்கொண்டிருக்கும் கலைஞர் நடிகவிநோதன்

டெனிஷ் மக்களையும் தன் ஆளுமையால் ஆகர்ஷித்துக்கொண்டிருக்கும் கலைஞர் நடிகவிநோதன் T.யோகராஜா அவர்கள்!!

ஈழத்தில் வாழும்போது பல மேடை நாடகங்களிலும் இலங்கை வானொலியிலும் நடித்து புகழ் ஈட்டியவர்.

ஈழுத்தில் இவர் மேடையேற்றிய „ஒருசதம்“ சமூகநாடகம் பெரும் புகழை பெற்று தந்த நாடகமாகும்.

காத்தான் கூத்தை அந்த காலத்தில் நடித்தது போல் பாடி நடிக்கும் சிறப்பு இன்றும் தொடர்வது அவரது தனித்துவமென்று கலை விமர்கர்கள் கூறுகிறார்கள்.

டென்மார்க்கில் டெனிஷ் கலைஞர்களுடன் இணைந்து முழுநேர தொழில்ரீதியான கலைஞனாக டெனிஷ் மொழியில் டெனிஷ் மக்களுக்கும் நாடகங்களை வழங்கி புகழுடன் வாழ்கிறார்.

சொந்த மண்ணில் தொடங்கிய அவர்கலை சிறப்புற்று வந்த மண்ணிலும் வானுயர்ந்து நிற்கிறது!!

வாழ்த்துக்கள் .
பாரிஸில் ஒரு நிகழ்வில் நடிகவிநோதன் T.யோகராஜா, கே.பி.லோகதாஸ் ;;