தமிழ் டைம்ஸ் பத்திரிக்கை,3 ஆண்டுகளைத் தொட்டு நிற்கிறது

வாழ்த்துவோம்..வாழும்போதே !!!!
தமிழ் டைம்ஸ்.. யேர்மனியிலிருந்து வெளிவரும் மாதாந்தப் பத்திரிக்கை,3 ஆண்டுகளைத் தொட்டு நிற்கிறது.ஒரு பத்திரிக்கை யை வெளியீடு செய்வதென்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை.. அத்துறையில் உள்ளவர்கள்,அல்லது அவர்களோடு கரம் கோர்த்துள்ளவர்களால் மட்டும் தான் பூரணமாக அறிந்து கொள்ளமுடியும்.அந்தவகையில், திரு தவா அவர்களைப் பிரதம ஆசிரியராகவும்.அவரோடு இணைணந்துள்ள அனைவரையும்..நினைத்துப்பார்க்கிறேன்.எமது தாய்மொழியை எப்பாடு பட்டேனும் வளர்த்துவிட வேண்டும் என்ற ஆசையைத்தவிர வேறொன்றுமில்லை என்பது நாமறிவோம்.இவர்களை இடையிடையே நாம் தட்டிக் கொடுத்தும், ஊக்கப்படுத்தவும் வேண்டும்.அப்பொழுதுதான், அவர்கள் உற்சாகத்துடன், செயற்பட்டு..உழைப்பர்.நம்மில் எத்தனைபேர்..இதனைச் செய்கிறோம்.இந்த வேளையில்.இவர்களது சேவையை பாராட்டவேண்டும் போல் தோன்றியது..உறவுகளே..பணிதொடர…வாழ்த்துக்கள்.இவர்களைப்போல , நம்மோடு பயணிக்கும், வெற்றிமணி,அகரம்,நாங்கள்..என, வாழ்த்துக்கள் பெறுவர்.என்னை இறைவன் நன்றாய்ப் படைத்தனன்
தன்னை நன்றாய்த் தமிழ்செய்யுமாறே…!!!!