தர்மத்தின் தேவனே… 

மனித மனங்களும்
குறுகியே போனதே !
வஞ்சனையும் சூழ்ச்சியும்
வையத்தை ஆளுதே !

நீயா நானா
போட்டியே நிகழுதே !
அநீதியே அதிகார
ஆசனம் ஏறுதே !

அழிவின் விழிம்பிலே
மானிடம் நிற்குதே !
தர்மத்தின் தேவனே
அவதரிக்க மாட்டாயோ ?

– வேலணையூர் ரஜிந்தன்.