தற்கொலை!கவிதை ஜெசுதா யோ

 

தற்கொலை – ஒரு
கோழையின் முடிவு

எமக்கான சோகங்களை
பிறர்மேல் திணிக்கும்
பரிதா நிலை

பாவம் ஏதும் அறியாத
பிள்ளைகளும் பெற்றோர்களும்
உலகின் முன் குற்றவாளியாக
தலைகுனித்து நிற்க
ஏற்பாடு செய்யும்
ஓர் அவலம்

முகநூல் என்பது
முடிவில்லாத ஒன்று
இன்று உள்ளது
நாளையில்லை
நல்லதும் உண்டு
தீயதும் உண்டு
அன்னம் போல நீயும்
பிரித்தறிய முயற்சி செய்
இல்லை
அதனுள் மூழ்கிப் போகாதே

ஆணினமே
சற்று சிந்திக்கலாம்
பெண் என்பது
போகப் பொருள் இல்லையே
உன் அன்னையும் பெண் தானே
உன் தங்கையும் பெண் தானே
உன் தாராமும்பெண் தானே

உயிர் என்பது
எல்லோருக்கும்
உரித்தானதே
படைத்தவனுக்கு கூட
அனுமதியில்லை
பறிப்பதற்கு

தவறு யார் பக்கம்
வாதிடவில்லை
விவாத மேடையும் இல்லை
விலைமதிப்பில்லாத
ஓர் உயிர்
நினைவில் கொள்ளுங்கள்

அன்போடு பழகினால்
பண்போடு இருங்கள்
இல்லை விலகிப் போங்கள்
பாவம் ஓர் உயிர் பிரிய
காரணமாக ஏன் …???

ஆக்கம் ஜெசுதா யோ

என் மனதைப்பாதித்த
உண்மைச் செய்திக்காய்

Merken