தற்கொலை தீர்வாகுமா?கவிதை.ரதிமோகன்

வீரம் விளையாடிய மண்ணில்
வந்துதித்த ஆரணங்கே
எதற்காக உனக்கு இந்த முடிவு

பாதகர்களின் ஈனச்செயல் கண்டு
பொங்கி நீ எழுந்திருந்தாயானால்
பதுங்கியே ஓடியிருப்பர் பாவிகள்.

பாடம் சொல்வதாய் நீ
பஞ்சமாபாதகர்களின்
உயிரை எடுத்திருந்தாயானால்
தமிழ்த்தாய் மகிழ்ந்திருப்பாள்..,

செங்குழியில் ஈனரை புதைக்காமல் நீ
உன்னுயிரை அநியாயமாக எடுத்துக்கொண்டது தப்பு…

எத்தர்களை இனங்காட்டி
இனியும் அநியாயமாக
இன்னொரு பெண்ணின்
உயிர் போகாமல் காப்பாற்றுவதே
இந்த ஆத்மா சாந்தி அடைய
ஒரே வழி..

குறிப்பு: பெண்களே எது வந்த போதும் கலங்காதீர்கள்..மனம் விட்டு எவருடனாவது பேசுங்கள். கோழைத்தனமான இந்த முடிவை எடுக்காதீர்கள். தற்கொலை தீர்வல்ல.. நிமிர்ந்து நில்லுங்கள்.. பாரதி கண்ட புதுமைப்பெண்கள் நீங்கள்…

ரதிமோகன்

Merken