தலை வாழையிலையில்….கவிதைகலைத்தாயின்மகன்கவிஞர் தயாநிதி

நிலைக்கும்
இந்த வாழ்வில்
நிலைக்கும்
என்று ஏதுண்டு…?

வழுக்கும்
இந்த வாழ்வில்
வழுக்காமல்
வாழ்ந்தவருண்டா.?

விழுந்து எழுந்து
நடக்கும் இந்த
பிறப்பில்
நடக்காதவருண்டா?

பாழும் காதல்
வாழ்வில் விழுந்த
போதும் யாரும்
காதலிக்காமலிருந்ததுண்டா?

இருந்தவர்
இருக்கின்றார்
இனித்த படி வாழ்கின்றார்
இல்லாமலில்லை..

இப்படியாக வாழ்ந்தவர்
கை விரல் எண்ணிக்கையில்
முயன்று பாருங்கள்
தேனாய் இனிக்கும்.
தினம் தலை வழையிலையில்
குழையல் சாதமாகும்.