தாயே தெய்வம்!

தாயே என்தன் தெய்வம்-என்னை
தரணி தந்த செல்வம்
கருவினில் தாங்கி
உருவத்தை தந்து
உலகுக்கு தந்த தெய்வம் அவள்

அவள் போல் செல்வம் ஏதுமில்லை
அவள் இன்றி எனக்கு வாழ்வு இல்லை
காலையாய் புலர்வாள் கண்போல் காத்தாள்
உதிரத்தை சொரிந்து பாலாய் ஊ ட் டி வளர்த்து
உலகத்தில் என்னை வாழவைத்தாள்
அவள் போல் செல்வம் ஏதுமில்லை
அவள் இன்றி எனக்கு வாழ்வு இல்லை

தன்னை உருக்கி என்னை வளர்த்த
தாய்க்கு நிகர் தான் எது உண்டு
மண்ணில் பிறந்த பிறப்பில் எங்கும்
அவள் போல் மதிப்பு தான் உண்டோ
மலரும் முகத்தடன் மண்ணில் பிறந்த
தெய்வம் அவள்பேல் எது உண்டோ
அவள் போல் செல்வம் ஏதுமில்லை
அவள் இன்றி எனக்கு வாழ்வு இல்லை

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 30.07.2021 உருவான நேரம் காலை20.30 மணி