தாய்மண் வாசத்தில் துளிர்த்த விழா!

நதிக்கரை நினைவுகள் தாயகத்தில் பல கல்விமான்கள்
மத்தியில் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது
பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆசிரியர்கள்
உட்பட அரங்கு நிறைந்திருந்தது.

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் திரு தேவராசா
தலைமை வகிக்க ஆசிரியர் ரதி ஆய்வுரை செய்ய
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் குமரன் அவர்கள்
வெளியீட்டுரையை சிறப்பாக நிகழ்த்த நுாலை பேராசிரியர்
வெளியிட்டு வைத்தார்.முதற்பிரதியை ஆலய பரிபாலன தலைவர்
திரு நடராசா பெற்றுக்கொண்டார்

விழா ஏற்புரையை திருமதி நகுலா சிவநாதன் ஆற்றினார்
நதிக்கரை நினைவுகள் தலைப்பு எல்லோரும் பிடித்திருப்பதை
அழகாக பேசிச் சென்றனர்.
வாழ்த்துரைகளை பலர் ஆற்றினர்.
நிகழ்ச்சியை தன் கம்பீரக்குரலால் கிலசன் அவர்கள்
தொகுத்து வழங்கினார்.
மிக மகிழ்வு தந்த வெளியீடாகப் பார்க்கிறேன்
பாடசாலை அதிபருக்கும் பேராசிரியருக்கும் இதயத்து நன்றி