தியாக சொல்லின் பொருளானவன்!கவிதை ஜெசுதா யோ

தியாகம் என்ற சொல்லின்
பொருளானவன்
சாத்வீகப்போராட்டத்தில்
உலகில் தனியிடம் பிடித்தவன்
இறந்தும் உடலை பயன்பெறச்செய்தவன்
எங்கள் மனங்களில்
நிறைந்த மகத்தானவன்

அகிம்சையே அறமென்ற
காந்தி தேசம்
திலீபனின் உயிரை
நாசம் செய்தது
பாரத தேசத்தின்
வேஷம் கலைந்தது

நல்லூர் கந்தன்
கருணையற்றவன்
கண்திறந்துபாராது
காவுகொண்டவன்

ஈழத்தின் மகத்தான
வீரனானவன்
யுத்தத்தின் புனிதம் பெற்றவன்
தியாகத்தின்
சிகரம் தொட்டவன்
ஈழத்திற்காய் இலட்சிய
திலகமிட்டவன்

திலீபனின் தியாகம் ஜெயிக்கும்
பார்த்தீபன் கனவு பலிக்கும்
நம் மனங்களின் அழியாத எண்ணங்கள்
வரும் சந்ததிக்கும் விதைக்கும்
இலட்சிய வார்த்தைகள்

தியாகச் செம்மல் திலீபன்
எங்கள் மனங்களில் நிறைந்த
மாவீரன்…//

                                                               ஆக்கம் ஜெசுதா யோ