தும்பளை பொண்ணு..!கவிதை அ.பவளம் பகீர்.

 

முட்டை கண்ணால
என் மனசை சாய்ச்சவ
ஓராம் கட்டையிலிருந்தே
பின் தொடர வைச்சவ
சித்தப்பா பூங்கா கடக்கையில்
சில்லு சில்லாய் உடைந்து போனேனே..

தும்பளை பொண்ணு
அவ கம்மல பார்த்து
கவுந்து போன ஆம்பள நானு
சயன் சென்ரர் ரியூசனுக்கு
அயன் பண்ணி வர வெச்சவ
மொடொனில் படிச்ச போதாதென
எக்கவுண்ஸ்ஸுக்கு எக்ஸ்ரா கிளாஸென
என் சி ஏ யும் போனேனே..

மெத்தைக்கடை சந்தியால
தெருமூடி மடம் தாண்டி வருவாளென
மணியாரம் சந்தியில
மணிக்கணக்கா நின்றேனே
மணி ஆகுது என்றிருக்க
அண்ணனோட வந்தாளே கண்மணி
ஆடி அசைஞ்சு போனேனே
மந்திகையில் அட்மிற்றா இருக்கனே
காதல் பரத்தா இப்போ ஆயிட்டேனே..

அ.பவளம் பகீர்.