தூரமில்லை;;!கலைஞர் தயாநிதி

நம்பித்தான்
வந்தாய்….
நம்பித்தான்
நடந்தோம்.;
நம்பித்தான்
இருந்தோம்..!
வாழ்க்கையில்
படிக்காத
பாடங்கள்
ஏராளம்..
பாரினில்
பாசாங்குகள்
தாராளம்;;!
வா நாம்
போகுமிடம்
வெகு தூரமில்லை
ஈரமில்லா
இடங்களிலே
பாசி கூடத்
தளைக்காது..!
எனக்கென
உனக்கென
உண்மையாய்
ஏதும் இருப்பிலில்லை
உனக்கு நான்
எனக்கு நீ
என்பதே எம்
மனக் கணக்கிலுண்டு..!
சபிக்காதே
சலிக்காதே
வலிக்காமல்
வாழ்க்கை யாருக்கும்
வாய்த்ததில்லை;..
வா நாம்
போகுமிடம்
வெகு தூரமில்லை;;

கலைஞர் தயாநிதி