தென்னாடு சிவனே!  நம் பாடு காப்பாய்! 

இன்னல்கள் 
கண்டு ஏன் எழவில்லை!
ஈகங்கள் தந்தோம்
வழி தரவில்லை!
தேசமே உன்னை
தேடிய தைய்யா!
பிஞ்சு நாவுகள்
கூட சிவ சிவ என்றதைய்யா!
நீ வரவில்லை!
ஏன் வரவில்லை!
ஏதிலி நாம் என்றா!
அருள் தரவில்லை!

ருத்திர தாண்டவம்
ஆடவில்லை இல்லை!
அன்று கதறினோம் சிதறினோம்
நீ வரவில்லை!
ஹர ஹர புவனே !
அம்பிகை பாகனே!
அசராமல் நின்றதேன்!
தமிழன் அழிவை கண்டு!

ஓ!
சுடுகாடு வரவில்லை
உடல்கள் என்றா!
இல்லை சுடுகாடே -தமிழன்
தேசம் என்றா!
தென்னாடு சிவனே!
நம் பாடு காப்பாய்!
நம் நாடு உயிர்க!
நீ ஆடு உரமாய்!

தே,பிரியன்.