தேசிய அறிவிப்பு போட்டியில் கலக்கப்போகும் யாழ்சிறி வானொலியின் அறிவிப்பாளர்கள்

யாழ்மண்ணில் புதிய ஊடகமாக உதயமாகிய யாழ்சிறி ஊடகமானதுதாயக இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து தன்னுள் இணைத்து புதிய விடிவெள்ளியாக யாழ் மண்ணில் இருந்து செயற்படும் யாழ்சிறியின் சாதனையின் மைல்கல்லாக இரண்டு இளம் அறிவிப்பாளர்கள் தேசிய ரீதியில் அறிவிப்புப்போட்டியில் பிரகாசிக்க இருக்கின்றார்கள்….

அந்தவகையில்தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் இளைஞர் விருது போட்டி – 2020
யாழ்மாவட்ட மட்ட கலாச்சாரப் விருது போட்டிகள்- 2020/12/26,27 ஆகிய திகதிகளில் நடைபெற்றது
இந்நிலையில்* கரவெட்டி பிரதேசத்தினை சேர்ந்தவரும் யாழ்சிறி வானொலியின் அறிவிப்பாளரும் இ.ராம்கி – தமிழ் அறிவிப்பாளர் போட்டியில் முதலாம் இடத்தினையும்,

அதனைப்போன்று யாழ்சிறி வானொலியின் இளம் அறிவிப்பாளினி செ.நீலாம்பரி – சாஸ்திரிய பாடல் போட்டியில் மூன்றாம் இடத்தினையும், தமிழ் அறிவிப்பாளர் போட்டியில் இரண்டாம் இடத்தினையும், பெற்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் மாகாணமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
இவர்களுக்கு கரவெட்டி பிரதேச சம்மேளனம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.அதனைப்போன்று யாழ்மண்ணில் இருந்து புதிய உதயமான ஊடகமான யாழ்சிறி வானொலியின் இளம்அறிவிப்பாளர்கள் தேசிய ரீதியில் நடைபெறும் அறிவிப்பாளர் போட்டியில் எம்மண்ணுக்கும் எம் ஊடகத்துக்கும் பெருமை பெற்றுத்தரவேண்டுமென யாழ்சிறி ஊடகமும் மனதார வாழ்த்திநிற்கின்றமை குறிப்பிடத்தக்கது…. www.yarlsri.fm https://play.google.com/store/search?q=yarlsrifm