தேடல்…..!கவிதை சுபாரஞ்சன்

அன்பின் வலிமை
அணுத்திறன் போலென அறிவோம்
அதிகாரத்தில் ஆற்றல் ஏதுமில்லையென உணர்வோம்…..

பண்பின் எளிமைக்கு
பாரினிலே பெருமதிப்பு
உண்டென அறிவோம்
பரிகசிப்பில் ஏதும் பயனில்லையென
உணர்வோம்……

அறிவின் தேடலுக்கு
எல்லையில்லை இவ்வண்டத்தில்
என அறிவோம்
தேடலில்லா வாழ்க்கை
வெறும் சதைப்பிண்டம் என உணர்வோம்…….

ஆக்கம்  சுபாரஞ்சன்