நகைச்சுவையால்…

மண்ணுக்கே
உரிய சிறப்பு.
அரியாலை
கலையின் ஊற்று…

குறிப்பாக
நகைச் சுவை
நாடகங்களின்
பெரு வங்கி…

திடீர் நாடக
மன்றம் இன்றும்
எம்மவர் மனங்களில்
கலை மணம் வீசும்..

லண்டனில் சதீஸ்
விந்தை இல்லை
தந்தையும் தமயனும்
பெரு விருட்சங்கள்.

இவர்கள் வழி
இவன் சகாப்தம்
அரங்கேறினால்
சிரிப்பு வெடிக்கும்.

சிரிக்க வைப்பது
பெரும் பணியும்
கடினமானதும்…
சதீசின் முக பாவமும்
குரலின் ஏற்ற இறக்கமும்
தனிச் சிறப்பு…

கூட நடிப்பவரையும்
நடிக்க விட்டு
வெடிக்க வைக்கும்
இவர் நடிப்பு. இன்று
ஐரோப்பிய மண்ணில்
பெரும் தடம் இவன்.
ஆடுவான் பாடுவான்
ஆடவும் வைக்கின்றான்
வாழ்த்துவோம் வாரீா்.

ஆக்கம் கவிஞர்தயாநிதி

 

Merken