நடுகல் நாவலுக்கு பாரிஸில் சிறப்பாக இடம்பெற்ற அறிமுக விழா!

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலுக்கு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அறிமுக விழா நேற்று (10.03.2019) சிறப்பான முறையில் இடம்பெற்றது. கடந்த 2019 சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியான நடுகல் நாவலுக்கு சென்னையில் வெளியீட்டு விழா இடம்பெற்றது. அத்துடன் அண்மையில் கிளிநொச்சியிலும் இந்த நாவலுக்கான அறிமுக விழா இடம்பெற்றது. இந்த நிலையில் பாரிஸ் நகரில் இடம்பெற்ற அறிமுக விழாவினை தடம் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இளைய தலைமுறையைசேர்ந்த இலக்கிய ஆர்வலர் யாழ்நிலா நாவலை வெளியிட்டு வைக்க செயற்பாட்டாளர் நாயகன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் கவிஞர் வாசுதேவன், இலக்கிய விமர்சகர் மணி நாகேஸ், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் சுதன் ராஜ் மற்றும் யாழ்நிலா ஆகியோர் நாவல் குறித்த உரைகளை ஆற்றியுள்ளனர். நிகழ்வின் நிறைவில், நாவல் குறித்த வாசகர்களின் உரையாடல்களும் இடம்பெற்றது. இதேவேளை இந்த நாவலுக்கான அறிமுக விழா இம மாதம் 23ஆம் திகதி கனடாவிலும், 30ஆம் திகதி லண்டனிலும் இடம்பெறவுள்ளதுடன் விரைவில் சுவிஸ்லாந்து நாட்டிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.