நடைப்பிணங்கள்!கவிதை

 

இரு துருவங்களாய்
அம்மாவும் அப்பாவும்
இடையில் நாமென்ன
பாவம் செய்தோம்.?

தம்பிக்குப் பாசத்தை
நானெங்கு பறித்தெடுப்பேன்
தாங்கிப் பிடிக்குமவனுக்குத்
தாயாக சிலையெடுப்பேன்

குட்டிச் சண்டைகள்
நெஞ்சுரமாய் நிலையெடுக்க
குட்டிச் சுவரான குடும்பத்துள்
நாமிங்கு நடைப்பிணங்கள்

ஆக்கம் அருள் நிலா வாசன்