நன்றியன்“ „கவித்தேன்“ ஆகிய நூல்களின் அறிமுகவிழா 30-06-2019 சிறப்பாக நடைபெற்றது.

„நன்றியன்“ „கவித்தேன்“ ஆகிய நூல்களின் அறிமுகவிழா கனடாவின் ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் „தமிழ்மாமணி“ „கவிமுரசு“ ஆகிய பட்டங்களைத் தன்னகத்தே கொண்டவரும் பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் அவர்களின் புதல்வருமான வா. மு. திருவள்ளுவர் அவர்களின் „நன்றியன்“ „கவித்தேன்“ ஆகிய நூல்களின் அறிமுகவிழா ஸ்காபுறோ நகரில் மார்க்கம் நகரில் அமைந்துள்ளFrontline Community Services அலுவலக கேட்போர் கூடத்தில் 30-06-2019 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 3.00 மணிக்குநடைபெற்றது

பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நூல் அறிமுக விழாவில் கலை இலக்கிய நண்பர்கள் பலர் வருகை தந்து சிறப்பித்தார்கள்
கவிஞர் அச்சுவேலியூர் கணேசன் விமர்சன உரையையும் திருவாளர்கள் அருட்கவி ஞான கணேசன், மின்னியல்துறை பேராசிரியர் திரு உதயகரன் துரைராசா ஆகியோர் வாழ்த்துரையும் வழங்கினார்கள். உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் வரவேற்புரையும் ஆற்றினர்.

.. நூல்களின் பிரதிகளை விழாவின் இறுதியில் எழுத்தாளரிடமிருந்த பெற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம்.