நல் வாழ்த்துக்கள்.


அன்பெனும்
நூலிலாடும் பெண்
விரல் நுனியில்
வித்துவம் நிறைந்தவள்.

அவளை
அழைத்துப் பார்
அணைத்துப் பார்
அரவணைத்துப் பார்
அவளே பேசும் தெய்வமாயிடுவாள்..

முறைத்துப்பார்
முண்டிப்பார்
சுண்டிப்பார்
பத்திரகாளியாகிடுவாள்.

பெண் என்பவள்
நூலில் ஆடும் 
பொம்மையல்ல
நூலும் அவளே
வாலும் அவளே
அவளின்றி பறத்தலேது.

படைப்பியலில்
இலக்கணம்.
பண்பியலில்
சாட்சியம்
வாழ்வியலில்
காத்திரம்
பெண்மையை
பாடுவோம்
பெண்மையை
போற்றுவோம்.
பெண்கள் தின

கவிஞர் தயாநிதி