நாங்கள் பாடும் குயில்கள் !கவிதை கவித்தென்றல் ஏரூர்

போர்முனையில் எழுதுகோல்
ஏந்திய வேங்கைகள்
பார் முழுதும் எங்கள் பாதைகள்
ஈழம் எங்கள் தாகங்கள்
நாங்கள் ஓதும் மொழிகள் வேதங்கள்

கடந்து வந்த பாதைகளில்
எங்கள் பாத சுவடுகள்
நாளை வருபவர்களுக்கு
விட்டுச் செல்வோம் எங்கள் ஏடுகள்

புலம்பெர்ந்த பூக்கள் ஆனாலும்
பூத்து நாங்கள் மொட்டு விடுவோம்
புதுமை செய்து பூமியில் மெட்டு இடுவோம்

இழப்பது எல்லாம் எங்கள் இலக்குகள்
ஒன்றை இழப்பதால் கிடைப்பதே வெற்றிகள்
ஒளிர எங்களை அழிப்பதால்
நாங்கள் தீக்குச்சிகள்
உலகம் முழுதும் முழங்கும் எங்கள் பேச்சுகள்

கல்லறையானவர்கள் எல்லாம் எங்கள் குருதிகள்
கண்ணீர் தந்த கயவர்களுக்கு
காயங்கள் தருவோம் இது உறுதிகள்
கலங்காது என்றும் வாழ்வோம் பூமியில்
கரிகாலன் தந்த இது எங்கள் வாழ்வியல்

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்

Merken