நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது

நான் என்று சொன்னால் 
உதடுகள் ஒட்டாது 
நாம் என்று சொன்னால் 
உதடுகள் ஒட்டுமடா 
எனது உனது என்றால் 
உதடுகள் முட்டாது 
எமது உமது என்றால் 
உதடுகள் முட்டுமடா

ஆணவம் எம்மை அழித்துவிடும் 
ஆசைகள் எம்மை ஒழித்துவிடும்
பணிவே எம்மை உயர்த்திவிடும
கனிவே என்றும் இனித்துவிடும் 
மனதினில் ஓர் ஓரத்திலாவது 
கருணை இருந்துவிட்டால்-நமது 
கர்வம் தொலைந்துவிடும்
காருண்யம் நிலைத்துவிடும்

பொன்னும் மண்ணும் பொருளும் 
நம்ம கூடவருவதில்லை 
அண்ணன் தம்பி உறவு அது 
ஆனந்தத்தின் எல்லை 
விட்டுக்கொடுக்கும் மனமிருந்தால் 
தொட்டதெல்லாம் துலங்கும் 
பட்டதுன்பம் எல்லாம் 
பனிபோலே விலகும்

கவிஞர் எழுத்தாளர் கோவிலுார் செல்வராஐா